பெயர் - புதுமைப்பித்தன் என்கின்ற சொ.விருத்தாசலம் பிள்ளை
பிறப்பு - ஏப்ரல் 25, 1906
பிறந்த இடம் - திருப்பாதிரிப்புலியூர்,கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு
சிறப்பு பெயர்கள் - புதுமைப்பித்தன்,சொ.வி, ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், கபாலி, சுக்ராச்சாரி மற்றும் இரவல் விசிறிமடிப்பு
இறப்பு - மே 5 1948
பணிகள் -
- இவரின் முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார் மணிகொடியில் வெளிவந்தது. அந்த முதல் படைப்பிலிருந்து தமிழுக்கு மிகத்தரமான இலக்கியப் படைப்பாளி கிடைத்திட்டார்.
- இவர் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார்.
- தமிழ் எழுத்துலகின் புரட்சி மைந்தன் என்று பாராட்டப்படும் அளவிற்கு, அதுவரை இதுதான் இலக்கியம் என்றிருந்த மரபுகளை அடித்து உடைத்து எழுதினார்.
- இவறுடைய சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. இன்றும் கூட "புதுமைப்பித்தன் சிறுகதைகள்" தொகுப்பிற்கு அத்தனை வரவேற்பு இருப்பதற்கு அவருடைய எழுத்தின் திறனே காரணம்.
- புதுமைப்பித்தனின் " கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்" எனக்கு மிகவும் பிடித்த படைப்பு, அந்தக்கதையில் மனிதனாக வந்து கடவுள் படும் அவஸ்தைகள் பெரும் சிரிப்பினையும், ஞானக் கேள்விகளையும், சமூக அக்கரையையும் வரவழிக்கும்.
கீழே இருக்கும் மூன்று படங்களும் கணினின் முகப்பில் வைக்கும் அளவிற்கு சிறந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. (1024*768) அளவு கொண்ட கணினி திரைகளுக்கு அழகாக பொருந்தும். எனவே படத்தினை வேண்டுவோர் சேமித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
"வாழ்க சோழியர்!. வளர்க வெள்ளாளர் புகழ்!".
என்றும் அன்புடன்,









VALTHUKKAL
பதிலளிநீக்கு